எம்.பி கனிமொழியின் வீட்டில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் வாபஸ்!

 

எம்.பி கனிமொழியின் வீட்டில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் வாபஸ்!

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகள் கனிமொழி எம்.பி இன் சென்னை சிஐடி காலனியில் உள்ள வீட்டில் தினமும் 4 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வந்தனர். தூத்துக்குடி, சாத்தான்குளத்தை சேர்ந்த தந்தை, மகன் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட போது சிறையில் உயிரிழந்த விவகாரத்தில், போலீசார் தாக்கியதால் தான் அவர்கள் உயிரிழந்திருப்பார்களோ என்ற சந்தேகத்தின் அடிப்படையில் டிஜிபியிடம் கனிமொழி புகார் அளித்திருந்தார்.

எம்.பி கனிமொழியின் வீட்டில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் வாபஸ்!

இந்த நிலையில், கனிமொழி எம்.பி வீட்டில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் வாபஸ் பெற்றுள்ளனர். தற்போது கனிமொழி வீட்டுக்கு எந்த அச்சுறுத்தல் இல்லாததாலும், கொரோனா தடுப்பு பணிக்குக் காவலர்கள் தேவைப்படுவதாலும் காவலர்கள் வாபஸ் பெறப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதி வீட்டில் போலீஸ் பாதுகாப்பு தொடர்ந்து நீட்டிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.