‘இது தான் மிச்சம்’ எடப்பாடிக்கு பதிலடி கொடுத்த எம்.பி ஜோதிமணி!

 

‘இது தான் மிச்சம்’ எடப்பாடிக்கு பதிலடி கொடுத்த எம்.பி ஜோதிமணி!

தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் 6ம் தேதி நடைபெறவிருக்கிறது. தேர்தலில் எப்படியாவது வென்று விட வேண்டுமென துடித்துக் கொண்டிருக்கும் அதிமுக, திமுக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. மூன்றாவது அணியாக உருவெடுக்க முயற்சிக்கும் மநீம, நாம் தமிழர் மற்றும் அமமுக ஆகிய கட்சிகளும் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன.

‘இது தான் மிச்சம்’ எடப்பாடிக்கு பதிலடி கொடுத்த எம்.பி ஜோதிமணி!

அந்த வகையில் முதல்வர் பழனிசாமி அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார். அக்கூட்டத்தில் பேசிய முதல்வர், பாஜகவுக்கு அதிமுக அடிமையில்லை. தமிழகத்துக்கு நலத்திட்டங்களை கொண்டு வருவதற்காக பாஜகவுடன் இணக்கமாக இருக்கிறோம். அதிமுக பாஜகவுக்கு அடிமையாக இருப்பதாக ஸ்டாலின் விமர்சிப்பது தவறு என்று கூறினார்.

‘இது தான் மிச்சம்’ எடப்பாடிக்கு பதிலடி கொடுத்த எம்.பி ஜோதிமணி!

இந்த நிலையில், முதல்வரின் இந்த கருத்துக்கு பதிலடி கொடுத்து கரூர் காங்கிரஸ் எம்.பி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், மத்திய அரசுடன் இணக்கமாக இருந்தால்தான் தமிழகம் வளர்ச்சியடையும்: எடப்பாடி பழனிசாமி. இணக்கமா இருந்து சாதிச்சதுன்னு என்ன? தமிழகத்துக்கு உரிய ஜி எஸ்டி கூட கிடைக்கல. காவேரி ஆணையம்,கீழடி, தமிழ் போச்சு, நீட், மின்கோபுரம் வந்துச்சு. ஊழல் வழக்கிலிருந்து உங்களை காப்பாத்திகிட்டது தான் மிச்சம் எனக் குறிப்பிட்டுள்ளார்.