எம்.பி. முந்திரி ஆலையில் கொலை: ஜிப்மரில் உடற்கூறாய்வு செய்ய கோரிக்கை!

 

எம்.பி. முந்திரி ஆலையில் கொலை:  ஜிப்மரில் உடற்கூறாய்வு செய்ய கோரிக்கை!

கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம் மேல்மாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தராசு என்பவர் பண்ருட்டியை அடுத்த பணிக்கன்குப்பத்தில் உள்ள டி.ஆர்.வி. காயத்ரி முந்திரி ஆலையில் கடந்த 7 ஆண்டுகளாக பணியாற்றி வந்திருக்கிறார்.இந்த ஆலை திமுகவைச் சேர்ந்த கடலூர் மக்களவை உறுப்பினர் டி.ஆர்.வி ரமேஷுக்கு சொந்தமானது. இந்த சூழலில் நேற்று அதிகாலை 2.30 மணிக்கு, சென்னையில் பணியாற்றும் அவரது மகன் செந்திலுக்கு கோவிந்தராசுவின் செல்பேசியிலிருந்து தொடர்பு கொண்ட கடலூர் மக்களவை உறுப்பினர் ரமேஷின் உதவியாளர் நடராஜன், உனது தந்தை தற்கொலை செய்து கொண்டாதாக கூறியுள்ளார். கோவிந்தராசு உடலின் பல இடங்களில் காயங்கள் இருந்ததாக தெரிகிறது. இதனால் கோவிந்தராசு கொலை தொடர்பாக காடாம்புலியூர் காவல் நிலையத்தில், டி.வி.ஆர் ரமேஷ் உள்ளிட்டோர் மீது புகார் அளிக்கப்பட்டது.

எம்.பி. முந்திரி ஆலையில் கொலை:  ஜிப்மரில் உடற்கூறாய்வு செய்ய கோரிக்கை!

இந்த விவகாரத்தில் கோவிந்தராசுவை இரக்கமற்ற முறையில் அடித்துக் கொடுமைப்படுத்தி கொலை செய்த வழக்கில் கடலூர் மக்களவை உறுப்பினர் டி.ஆர்.வி இரமேஷ் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்றும், வழக்கின் விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் என்றும் பாமக தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

எம்.பி. முந்திரி ஆலையில் கொலை:  ஜிப்மரில் உடற்கூறாய்வு செய்ய கோரிக்கை!

இந்நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ், “கடலூர் எம்.பி. ரமேஷுக்கு சொந்தமான முந்திரி ஆலையில் கோவிந்தராசு என்ற தொழிலாளி அடித்துக் கொல்லப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், கடலூர் எம்.பி உள்ளிட்ட 5 பேர் மற்றும் பிறர் மீது சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது! கோவிந்தராசு கொலையில் உள்ள ஐயம் போக்கப்பட வேண்டும் என்பதாலும், இதில் சம்பந்தப்பட்டவர் அரசியல் செல்வாக்கு மிக்கவர் என்பதாலும் கோவிந்தராசுவின் உடற்கூறாய்வு தமிழகத்துக்கு வெளியே புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட வேண்டும்! ” என்று கோரிக்கை வைத்துள்ளார்