2 கோடி கேட்ட கடத்தல்காரர்கள் -தெருக்கோடியில் நின்ற போலீஸ்காரர்கள் -சினிமா போல நடந்த வாலிபர் கடத்தல் .

 

2 கோடி கேட்ட கடத்தல்காரர்கள் -தெருக்கோடியில் நின்ற போலீஸ்காரர்கள் -சினிமா போல நடந்த வாலிபர் கடத்தல் .


என்ஜினீயரிங் பட்டதாரி வாலிபரை கடத்தி 2 கோடி கேட்ட கடத்தல்காரர்களை போலீசார் பிடித்து அந்த வாலிபரை மீட்டனர் .

2 கோடி கேட்ட கடத்தல்காரர்கள் -தெருக்கோடியில் நின்ற போலீஸ்காரர்கள் -சினிமா போல நடந்த வாலிபர் கடத்தல் .


பெங்களூருவில் சிவராமையா லேஅவுட், எச்.பி.ஆர் லேஅவுட் 3 வது பிளாக்கில் குடியிருக்கும் அரபாத் என்ற வாலிபர் மிகப்பெரிய கோடீஸ்வரரின் மகன் .இவர் ஒரு பொறியியல் பட்டதாரி ஆவார் .இவர் மார்ச் 25 அன்று அவர் தனது வீட்டின் அருகே நின்று கொண்டிருந்தபோது சில பேர் காரில் வந்து அவரை கடத்தி சென்றனர் .
அதன் பிறகு அந்த கடத்தல் காரர்கள் அராபத்தின் தந்தைக்கு போன் செய்து, அவரின் மகனை உயிரோடு ஒப்படைக்க 2 கோடி ரூபாய் தரவேண்டுமென்று பேரம் பேசினார்கள் .
பிறகு அவர்கள் அவரின் மகன் கை கால் கட்டப்பட்டிருக்கும் வீடியோவையும் அவருக்கு வாட்ஸ் அப்பில் அவரின் பெற்றோருக்கு அனுப்பி வைத்தார்கள் .அதை பார்த்த அவரின் பெற்றோரும் உறவினரும் அதிர்ச்சியடைந்தபின் போலீசில் தகவல் கூறினார்கள் .
போலீசார் ஒரு சிறப்பு படையை அமைத்து அந்த கடத்தல் காரர்கள் இருக்குமிடத்திற்கு செல்ல திட்டமிட்டார்கள் .அவர்களின் திட்டப்படி கடத்தப்பட்ட அராபத்தின் குடுமபத்திடம் பணத்தை எடுத்துக்கொண்டு கடத்தல்காரர்கள் சொன்ன இடத்திற்கு செல்லுமாறு கூறினர் .அதன்படி அவர்கள் பணத்தை எடுத்துக்கொண்டு கடத்தல்காரர்கள் சொன்ன இடத்திற்கு சென்ற போது, பின்னால் ஒரு தொழிலாளி போல சென்ற போலீசார் அவர்கள் அனைவரையும் கைது செய்தார்கள் .பின்னர் கடத்தப்பட்டஅராபத்தையும் மீட்டு அவர்களின் பெற்றோரிடம் ஒப்படைத்தனர்

2 கோடி கேட்ட கடத்தல்காரர்கள் -தெருக்கோடியில் நின்ற போலீஸ்காரர்கள் -சினிமா போல நடந்த வாலிபர் கடத்தல் .