‘குழந்தைகளை கழுத்தை நெறித்துக் கொன்ற தாய்’ தற்கொலை : அதிர்ச்சி சம்பவம்!

 

‘குழந்தைகளை கழுத்தை நெறித்துக் கொன்ற தாய்’ தற்கொலை : அதிர்ச்சி சம்பவம்!

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே வசித்து வந்த தம்பதி அய்யப்பன்(34) – சுதா (30). இவர்களுக்கு திலோக்நாத் (4) என்ற மகனும் ஐஸ்வர்யா (3) என்ற மகளும் இருக்கின்றனர். இந்த தம்பதிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், நேற்றும் சண்டை நடந்ததால் சுதா மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்த நிலையில், நேற்று சுதாவின் தந்தை அவரது வீட்டிற்கு சென்று பார்க்கையில் குழந்தைகள் இருவரும் சடலமாக கிடந்துள்ளனர்.

‘குழந்தைகளை கழுத்தை நெறித்துக் கொன்ற தாய்’ தற்கொலை : அதிர்ச்சி சம்பவம்!

அதோடு, சுதாவும் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த தந்தை , உடனே போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார் . இச்சம்பவம் தொடர்பான முதற்கட்ட விசாரணையில், சுதா தனது குழந்தைகளை கழுத்தை நெருக்கி கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது. ஆனால் சுதாவின் உடலிலும் குழந்தைகளின் உடலிலும் காயம் இருந்ததால் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக சுதாவின் தந்தை புகார் அளித்துள்ளார்.

இதனிடையே, சுதாவிடம் வர தட்சணை கேட்டு அய்யப்பன் கொடுமைப்படுத்தி வந்ததும் அம்பலமானது. இதனடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், மரணத்திற்கு வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா? என்ற கோணத்தில் விசாரணையை தொடர்ந்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.