பேருந்து மோதி தாய் – மகன் பரிதாப பலி!

 

பேருந்து மோதி தாய் – மகன்  பரிதாப பலி!

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே மினி பேருந்து விபத்தில் தாய் – மகன் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே செம்மினிபட்டியை சேர்ந்தவர் சீனிவாசன் – ராணி தம்பதி. இவர்களுக்கு 3 மற்றும் 1 வயது முறையே முத்துகிருஷ்ணன் மற்றும் ராமகிருஷ்ணன் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.

பேருந்து மோதி தாய் – மகன்  பரிதாப பலி!

இவர்கள் 4 பேரும் ஒரே இரண்டு சக்கரவாகனத்தில் செம்மினி பட்டியிலிருந்து வாடிப்பட்டிக்கு வந்துள்ளனர். அப்போது பூச்சம்பட்டிக்கு சென்ற மினிபஸ் காமராஜ் காலனி அருகே வந்த போது சீனிவாசன் வந்த இரண்டு சக்கர வாகனத்தின் மீது மோதியுள்ளது.

பேருந்து மோதி தாய் – மகன்  பரிதாப பலி!

இந்த கோர விபத்தில் தாய் ராணியும், குழந்தை ராமகிருஷ்ணனும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதை கண்ட பொதுமக்கள் மினிபஸ் ஓட்டுநரை கைது செய்யக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து தகவலறிந்த சமயநல்லூர் போலீசார் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து மினிபஸ் ஓட்டுநர் தாதம்பட்டி குமரேசனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பேருந்து விபத்தில் தாய் -மகன் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.