ராமநாதபுரம் அருகே தாய், மகன் விஷம் குடித்து தற்கொலை… குடும்ப தகராறில் சோகம்!

 

ராமநாதபுரம் அருகே தாய், மகன் விஷம் குடித்து தற்கொலை… குடும்ப தகராறில் சோகம்!

ராமநாதபுரம்

ராமநாபுரம் மாவட்டம் தொண்டியில் மதுரையை சேர்ந்த தாய், மகன் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை மாவட்டம் பையூர் பகுதியை சேர்ந்தவர் சின்ன முனியாண்டி. இவரது மனைவி மாரியம்மாள் (60). இவர்களுக்கு பாக்கியராஜ் (37) உள்ளிட்ட 2 மகன்கள் உள்ளனர். கணவர் உயிரிழந்து விட்ட நிலையில் மாரியம்மாள், தனது மகன்களுடன் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பு, மூத்த மகனுக்கும், மாரியம்மாளுக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டு உள்ளது. இதில் மனமுடைந்த மாரியம்மாள், அவரது மகன் பாக்கியராஜ் ஆகியோர் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்துள்ளனர்.

ராமநாதபுரம் அருகே தாய், மகன் விஷம் குடித்து தற்கொலை… குடும்ப தகராறில் சோகம்!

இதற்காக நேற்று ராமாநாபுரம் மாவட்டம் தொண்டி கடற்கரை பகுதிக்கு சென்ற இருவரும், அங்கு விஷத்தை குடித்து தற்கொலைக்கு முயன்றனர். அதில், மாரியம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பாக்கியராஜ் உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்தார். இதனை அறிந்த தொண்டி போலீசார் விரைந்து சென்று பாக்கியராஜை மீட்டு சிகிச்சைக்காக தொண்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். எனினும், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

தொடர்ந்து, மாரியம்மாள் மற்றும் பாக்கியராஜ் ஆகியோரது உடல்கள் பிரேத பரிசோதனைக்காக திருவாடாணை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த தற்கொலை சம்பவம் குறித்து தொண்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.