‘பிறந்த 9 நாட்களே ஆன குழந்தை’ வறுமையால் ரூ.15 ஆயிரத்துக்கு விற்ற தாய் கைது!

 

‘பிறந்த 9 நாட்களே ஆன குழந்தை’ வறுமையால் ரூ.15 ஆயிரத்துக்கு விற்ற தாய் கைது!

பிறந்து 9 நாட்களே ஆன குழந்தையை ரூ.15 ஆயிரம் பணத்துக்காக விற்ற பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஒடிசா மாநிலம் சம்பல்பூர் மாவட்டத்தை சேர்ந்த பெண் ஒருவர், தனது குழந்தை பிறந்த 9 நாளில் குழந்தை இல்லாத ஒரு தம்பதிக்கு விற்றிருக்கிறார். இது தொடர்பாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில், அந்த பெண்ணின் வீட்டுக்கு போலீசார் சென்றுள்ளனர். அப்போது அங்கு அந்த பெண்ணின் தந்தை மட்டுமே இருந்திருக்கிறார்.

‘பிறந்த 9 நாட்களே ஆன குழந்தை’ வறுமையால் ரூ.15 ஆயிரத்துக்கு விற்ற தாய் கைது!

அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், ஏற்கனவே அந்த பெண்ணுக்கு 5 குழந்தைகள் இருக்கின்றனர் என்றும் கணவன் அவரை விட்டுச் சென்று விட்டதாகவும் ஊரடங்கால் ஏற்பட்ட வறுமையால் குழந்தையை விற்றதாகவும் அவர் கூறியுள்ளார். அவர் கொடுத்த தகவலின் பேரில், குழந்தையை வாங்கிக் கொண்ட தம்பதியிடம் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.

‘பிறந்த 9 நாட்களே ஆன குழந்தை’ வறுமையால் ரூ.15 ஆயிரத்துக்கு விற்ற தாய் கைது!

அந்த தம்பதி தாங்கள் முறையாக குழந்தையை தத்தெடுத்ததாக கூறிய நிலையில், அவர்களிடம் ஆவணம் ஏதும் இல்லையாம். அதனால் குழந்தையை கைப்பற்றிய போலீசார், குழந்தைகள் நலவாரியத்தில் ஒப்படைத்துள்ளனர். மேலும், குழந்தையை விற்ற பெண்ணையும் வாங்கிய தம்பதியையும் போலீசார் கைது செய்துள்ளனர்.