“ஏன்யா என்கிட்டேயே இன்னொருத்தியை கட்டிக்குவேன்னு சொல்றே” -மனைவியால் கணவனுக்கு நேர்ந்த கதி

 

“ஏன்யா என்கிட்டேயே   இன்னொருத்தியை கட்டிக்குவேன்னு சொல்றே” -மனைவியால் கணவனுக்கு நேர்ந்த கதி

மனைவியிடமே தான் இன்னோரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள இருப்பதை கேட்டு கொதித்த மனைவி அவரின் கணவரை துணியால் கழுத்தை இறுக்கி கொலை செய்துவிட்டார்.

“ஏன்யா என்கிட்டேயே   இன்னொருத்தியை கட்டிக்குவேன்னு சொல்றே” -மனைவியால் கணவனுக்கு நேர்ந்த கதி

தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில்  உள்ள ஒரு கிராமத்தில் பிரபு என்ற 38 வயதான கணவரும் ,உமா மஹேஸ்வரி என்ற 30 வயதான மனைவியும் வாழ்ந்து வந்தார்கள் .அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள் .அவர்களிருவரும் அருகிலுள்ள ஒரு பள்ளியில் படித்து வருகிறார்கள் .அவர்களின் இன்பமான வாழ்வில் குடி அரக்கன் நுழைந்ததால் துன்பம் சூழ்ந்தது .அந்த பெண்ணின் கணவருக்கு திடீரென குடிப்பழக்கம் அதிகமானது. அதனால் தினமும் குடித்து விட்டு வந்து  தன்னுடைய மனைவியோடு சண்டை போடுவார் .அப்போதெல்லாம்  அவர் குடிபோதையில் பிள்ளைகள் எதிரிலேயே மனைவியை தாக்கியுள்ளார் .இந்த தாக்குதலில் அவர் பலமுறை காயமுற்று சிகிச்சை எடுத்துள்ளார் .

இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமையன்று அந்த கணவருக்கும் அந்த மனைவிக்குமிடையே சண்டை அதிகமாகியுள்ளது ,அதனால் அந்த கணவர் தன்னுடைய மனைவியிடம் தான் பக்கத்து ஊரிலிருக்கும் தன்னுடைய உறவுக்கார பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக கூறியுள்ளார் .இதை கேட்டதும் அந்த மனைவி உமாவுக்கு கோபம் வந்துள்ளது .அதனால் அவர் அங்குள்ள ஒரு துணியை எடுத்து வந்து தன்னுடைய கணவரின் கழுத்தில் வைத்து இழுத்து கொலை செய்து விட்டார் .பின்னர் இந்த கொலை பற்றி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது .போலீசார் விரைந்து வந்து இறந்த பிரபுவின் பிணத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தார்கள் .பிறகு கணவரை கொலை செய்த மனைவி உமாவை கைது செய்து சிறையிலடைத்தார்கள்

“ஏன்யா என்கிட்டேயே   இன்னொருத்தியை கட்டிக்குவேன்னு சொல்றே” -மனைவியால் கணவனுக்கு நேர்ந்த கதி