“காலி பண்ணிட்டா ஜாலியா இருக்கலாம்” -உறவுக்கு தடையாக இருந்த குழந்தைக்கு தாயால் நடந்த கொடூரம் .

 

“காலி பண்ணிட்டா ஜாலியா இருக்கலாம்” -உறவுக்கு தடையாக இருந்த குழந்தைக்கு தாயால் நடந்த கொடூரம் .

கள்ள காதலுக்கு தடையாக இருந்த மூணு வயசு குழந்தையை கொன்றதாக ஒரு தாயையும் அவரின் காதலனையும் போலீஸ் கைது செய்தது.

“காலி பண்ணிட்டா ஜாலியா இருக்கலாம்” -உறவுக்கு தடையாக இருந்த குழந்தைக்கு தாயால் நடந்த கொடூரம் .


குஜராத் மாநிலம் அஹமதாபாத்தில் வசிக்கும் 26 வயதான ஜோதி பாரமேர் என்ற பெண் அங்குள்ள ஆஸ்ப்பிட்டலில் வேலை பார்த்து வருகிறார் .அவர் தன்னுடைய கணவருக்கு தெரியாமல் பூபேந்திர என்ற வாலிபரோடு கள்ள உறவில் ஈடுபட்டு இருந்தார் .அந்த பெண்ணுக்கு யுவி என்று மூன்று வயதான மகன் இருக்கிறார் .இந்நிலையில் அந்த பெண்னின் கள்ள காதலுக்கு அந்த குழந்தை தடையாக இருந்துள்ளது .அதனால் அந்த காதலர்கள் இருவரும் சேர்ந்து அந்த யுவியை எப்படி கொலை செய்வது என்று யோசித்து கொண்டிருந்தார்கள் .
இதற்கிடையே அந்த யுவிற்கு கடந்த வாரம் திடீரென்று காய்ச்சல் வந்தது .அதனால் அந்த பெண் அந்த சந்தர்ப்பத்தை பயன் படுத்தி அந்த யுவியை கொல்ல முடிவெடுத்தார் .அப்போது அவர் தன்னுடைய காதலனிடம் இது பற்றி கூறினார் அதற்கு அந்த காதலன் அந்த குழந்தை யுவிற்கு விஷம் கலந்த பிஸ்கட்டை கொடுக்க சொன்னார் .அதன் படி அந்த பெண் விஷம் கலந்த பிஸ்கட்டை கொடுத்தார் .பிறகு அந்த யுவிக்கு காய்ச்சல் என்று கூறி அங்குள்ள ஹாஸ்ப்பிட்டலில் சேர்த்தனர் .அதன் பிறகு அந்த யுவி இறந்து விட்டான் .
பிறகு அந்த யுவியை அடக்கம் செய்தனர் .ஆனால் அந்த யுவியின் மரணத்தில் சந்தேகப்பட்ட அவரின் கணவர் மற்றும் உறவினர்கள் போலீசில் புகார் கொடுத்தனர் .போலீசார் வழக்கு பதிந்து அந்த யுவியின் உடலை பிரேத பரிசோதனை செய்தபோது , அவர் விஷம் கொடுத்து கொன்றதை கண்டுபிடித்து அந்த தாயையும் காதலனையும் கைது செய்தனர்