‘திருமணம் செய்து வைக்குமாறு தகராறு செய்த மகன்’ : திட்டமிட்டு போட்டுத் தள்ளிய தாய்!

 

‘திருமணம் செய்து வைக்குமாறு தகராறு செய்த மகன்’ : திட்டமிட்டு போட்டுத் தள்ளிய தாய்!

தெலுங்கனா அருகே ஒரு லட்சம் ரூபாய் பணத்திற்காக தாய் மகனைக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கனா மாநிலம் விகாராபாத் மாவட்டத்தைச் சேர்ந்த தம்பதி மச்சேந்தர்- லஷ்மம்மா. இவர்களுக்கு 4 மகன்கள் இருக்கும் நிலையில், கடைசி மகன் பெயர் சிவபிரசாத். இவருக்கு மது பழக்கம் இருந்துள்ளது. மது போதையில், வீட்டில் இருக்கும் பணத்தை திருடுவதுடன் திருமணம் செய்து வைக்குமாறும் பெற்றோரிடம் தகராறு செய்து வந்துள்ளார்.

‘திருமணம் செய்து வைக்குமாறு தகராறு செய்த மகன்’ : திட்டமிட்டு போட்டுத் தள்ளிய தாய்!

இதனால் கடுப்பான லஷ்மம்மா, தனது தாய் மற்றும் சகோதரருடன் சேர்ந்து சிவபிரசாத்தை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். இதற்காக அனந்தராமன் என்பவரிடம் ரூ.1 லட்சம் பணத்திற்கு பேரம் பேசி, முதற்கட்டமாக
20,000 பெற்றுக் கொண்டுள்ளார். சிவபிரசாத்தை அழைத்து மது கொடுத்து, போதை தலைக்கேறிய பின்னர் கழுத்தை நெறித்து அவரைக் கொலை செய்துள்ளார். சடலத்தை ஒரு இடத்தில் புதைத்து விட்டு, மகனை காணவில்லை என்றுக் கூறி நாடகமாடியுள்ளார். இவை அனைத்தும் போலீசார் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. இதனையடுத்து, லஷ்மம்மா உட்பட 6 பேரைக் கைது செய்த போலீசார் அவர்களை சிறையில் அடைத்துள்ளனர்.