தவறான உறவால் பிறந்த குழந்தை… பிறந்து 4 நாட்களே ஆன குழந்தையை எரித்துக் கொன்ற தாய்!

 

தவறான உறவால் பிறந்த குழந்தை… பிறந்து 4 நாட்களே ஆன குழந்தையை எரித்துக் கொன்ற தாய்!

தென்காசியில் பிறந்து நான்கு நாட்களே ஆன பச்சிளம் குழந்தையை பெற்ற தாயே எரித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சங்கரன்கோவில் கோமதி சங்க திரையரங்க வளாகத்தில் குழந்தை ஒன்று எரிந்த நிலையில் வீசப்பட்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அங்கு விரைந்த காவல் அதிகாரிகள் குழந்தையின் சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். குழந்தையின் சடலத்துக்கு அருகே இரத்தக்கரை படிந்த துணிகளும் எரிந்த நிலையில் கிடந்துள்ளன.

தவறான உறவால் பிறந்த குழந்தை… பிறந்து 4 நாட்களே ஆன குழந்தையை எரித்துக் கொன்ற தாய்!

இதுதொடர்பாக சங்குபுரம் 6 ஆவது நகரை சேர்ந்த 22 வயது பெண் கோமதி மற்றும் அவரது பெற்றோரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அந்த குழந்தை கோமதியின் குழந்தை என்பது தெரியவந்தது. திருமணமாகாமல் தவறான பழக்கவழக்கத்தால் வந்த குழந்தை என்பதால் குழந்தையை தானே எரித்துக்கொண்றதாக கோமதி வாக்குமூலம் அளித்துள்ளார். இதனையடுத்து கோமதியை கைது செய்த காவல்துறையினர், அவரை சிறையில் அடைத்தனர்.