‘அம்மாவுக்கும் தோழிக்கும் நெருங்கிய உறவு…’ நரபலி கொடுக்க முயற்சிப்பதாக சிறுவர்கள் பகீர் புகார்!!

 

‘அம்மாவுக்கும் தோழிக்கும் நெருங்கிய உறவு…’ நரபலி கொடுக்க முயற்சிப்பதாக சிறுவர்கள் பகீர் புகார்!!

நரபலி கொடுக்க தாய் முயற்சிப்பதாக சிறுவர்கள் போலீசில் புகார் அளித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

‘அம்மாவுக்கும் தோழிக்கும் நெருங்கிய உறவு…’ நரபலி கொடுக்க முயற்சிப்பதாக சிறுவர்கள் பகீர் புகார்!!

ஈரோடு மாவட்டம் ரங்கபாளையத்தை சேர்ந்தவர் ராமலிங்கம். இவருக்கு ரஞ்சிதம் என்ற மனைவியும், 15 மற்றும் 6 வயதில் இரண்டு மகன்களும் உள்ளனர். ராமலிங்கம் இரண்டாவதாக இந்துமதி என்ற பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்குப் பிறகு இரு மனைவிகளுடனும் ராமலிங்கம் ஒரே வீட்டில் வசித்து வந்ததாக கூறப்படுகிறது.

‘அம்மாவுக்கும் தோழிக்கும் நெருங்கிய உறவு…’ நரபலி கொடுக்க முயற்சிப்பதாக சிறுவர்கள் பகீர் புகார்!!

இந்த சூழலில் இந்துமதியின் தோழி தனலட்சுமியுடன், ராமலிங்கத்தின் முதல் மனைவி ரஞ்சிததிற்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இருவரும் நெருங்கி பழகிய நிலையில் தனியாக வீடு எடுத்து வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் ரஞ்சிதமும், தனலட்சுமியும் சேர்ந்து இரண்டு மகன்களையும் துன்புறுத்தியதாக தெரிகிறது. இதனால் அவர்கள் வீட்டில் இருந்து தப்பித்து பாட்டி வீட்டில் தஞ்சமடைந்த சிறுவர்கள் இருவரும் ரங்கம்பாளையம் போலீசில் புகார் அளித்துள்ளனர். அதில் தனலட்சுமியுடன் சேர்ந்து தாய் ரஞ்சிதம் தங்களை கொடுமைப்படுத்துவதாகவும், நரபலி கொடுக்கப் போவதாக பேசிக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தோழிகள் இருவரிடமும் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.