குமரி அருகே குடும்ப தகராறில் பெண் தீக்குளித்து தற்கொலை!

 

குமரி அருகே குடும்ப தகராறில் பெண் தீக்குளித்து தற்கொலை!

கன்னியாகுமரி

கன்னியாகுமரி அருகே குடும்ப தகராறில் மனமுடைந்த பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி பகுதியை சேர்ந்தவர் மேரி (61). இவரது மகன் அனிஸ் ஜஸ்டின். இவருக்கு திருமணமாகி புஷ்பம் என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். மேரி குடும்ப தகராறு காரணமாக கடந்த 20 ஆண்டுகளாக மகன் மற்றும் மருமகளுடன் வசித்து வந்தார்.

குமரி அருகே குடும்ப தகராறில் பெண் தீக்குளித்து தற்கொலை!

இந்த நிலையில், மேரிக்கும், அவரது மருமகள் புஷ்பத்திற்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால், அவர் கடந்த சில நாட்களாக மனமுடைந்து காணப்பட்டு வந்துள்ளார். நேற்றிரவு அனைவரும் வீட்டில் தூங்கி கொண்டிருந்தபோது, மேரி நள்ளிரவில் வீட்டின் பின்புறம் மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

இன்று காலை மகன் அனிஸ் ஜஸ்டின் சென்று பார்த்தபோது, மேரி உடல் கருகிய நிலையில் சடலமாக கிடந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர், ஆரல்வாய்மொழி போலீசாருக்கு தகவல் அளித்தார். அதன் பேரில் போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குமரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.