கொரோனாவில் இருந்த மீண்ட மகன் திடீர் மரணம்… அதிர்ச்சியில் தாயார் பலி…

 

கொரோனாவில் இருந்த மீண்ட மகன் திடீர் மரணம்… அதிர்ச்சியில் தாயார் பலி…

திருவண்ணாமலை

ஆரணியில் கொரோனாவில் இருந்து மீண்ட மகன் திடீரென மரணமடைந்ததால், அதிர்ச்சியில் தாயாரும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருவண்ணமாலை மாவட்டம் ஆரணி சைதாப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் கணேசன் (59). கூலி தொழிலாளி. இவரது தாயார் வள்ளியம்மாள் (78). கடந்த மாதம் கணேசன் மற்றும் அவரது தாயாருக்கு திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, இருவரும் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

கொரோனாவில் இருந்த மீண்ட மகன் திடீர் மரணம்… அதிர்ச்சியில் தாயார் பலி…

அங்கு, இருவருக்கும் எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையில், வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. இதனையடுத்து, கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த இருவரும், கடந்த 10 நாட்களுக்கு முன்பு டிஸ்சார்ச் ஆகினர். இந்த நிலையில் கடந்த 11ஆம் தேதி இரவு திடீரென கணேசன் உயிரிழந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த வள்ளியம்மாள் கதறி அழுத படி, சிறிது நேரத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

மகன் இறந்த அதிர்ச்சியில் தாயும் பலியானதால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள், இருவருக்கும் ஒன்றாக இறுதிச் சடங்குகளை நடத்தினர். இந்த சம்பவம் ஆரணி பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.