கால்வாயில் தவறி விழுந்து தாய், மகள் பரிதாப மரணம்: மின் விளக்கு இல்லாததால் நேர்ந்த கதி!

 

கால்வாயில் தவறி விழுந்து தாய், மகள் பரிதாப மரணம்: மின் விளக்கு இல்லாததால் நேர்ந்த கதி!

சென்னை முகப்பேறு அருகே மின் விளக்கு இல்லாததால் ஸ்கூட்டியில் சென்ற தாய், மகள் கால்வாயில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அயனம்பாக்கதில் வசித்து வந்த பிரிசில்லா(50) தனது மகள் ஈவாலின்(20) உடன் மதுரவாயிலில் இருந்து அயனம்பாக்கம் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். மதுரவாயல் பைபாஸ் சாலையில் செல்லும் போது, அவர்கள் சென்ற ஸ்கூட்டி நிலை தடுமாறி அப்பகுதியில் இருந்த கழிவுநீர் கால்வாயில் விழுந்துள்ளது.

கால்வாயில் தவறி விழுந்து தாய், மகள் பரிதாப மரணம்: மின் விளக்கு இல்லாததால் நேர்ந்த கதி!

சுமார் 12 அடி ஆழம் கொண்ட அந்த கால்வாயில் விழுந்த ஈவாலின் மற்றும் பிரிசில்லா படுகாயம் அடைந்துள்ளனர். தகவல் அறிந்து வந்த போலீசாரும் தீயணைப்பு துறையினரும், அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்குள் இருவரும் ஆம்புலன்ஸிலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் குறித்து அப்பகுதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கால்வாயில் தவறி விழுந்து தாய், மகள் பரிதாப மரணம்: மின் விளக்கு இல்லாததால் நேர்ந்த கதி!

அப்பகுதியில் மின் விளக்கு இல்லாததாலும், 12 அடி கொண்ட கால்வாய் சாலைக்கு சம தளத்தில் அமைக்கப்பட்டு தடுப்புகள் ஏதும் அமைக்கப்படாததாலும் இந்த விபத்து நடந்திருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.