காதல் திருமணம் செய்த மகள்… வேதனையில் தாய் தீக்குளித்து தற்கொலை!

 

காதல் திருமணம் செய்த மகள்… வேதனையில் தாய் தீக்குளித்து தற்கொலை!

திருச்சி

திருச்சி அருகே மகள் காதல் திருமணம் செய்ததால் வேதனையில் தாய் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை அருகே உள்ள இனாம்புலியூரை சேர்ந்தவர் முத்துசாமி. இவரது மனைவி மணிமேகலை (38). இவர்களுக்கு 3 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். கணவர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டதால், மணிமேகலை தனியார் மருத்துவமனையில் துப்புரவு வேலை செய்து, குழந்தைகளை வளர்த்து வந்தார்.

காதல் திருமணம் செய்த மகள்… வேதனையில் தாய் தீக்குளித்து தற்கொலை!

இந்த நிலையில், மணிமேகலையின் மூத்த மகள் சௌந்தர்யா, பேரூர் பகுதியை சேர்ந்த இளைஞரை காதலித்து வந்துள்ளார். இதற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், கடந்த 10 நாட்களுக்கு முன்பு சௌந்தர்யா வீட்டில் இருந்து வெளியேறி காதலரை திருமணம் செய்து கொண்டார்.

இதனால் மனமுடைந்த மணிமேகலை நேற்று காலை வீட்டில் மண்ணெண்ணையை ஊற்றி தீவைத்துக் கொண்டார். இதில் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்த சோமரசம்பேட்டை போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.