அந்த பொம்பளைய என்கவுண்டர் பண்ணுங்க…கள்ளகாதலால் நடந்த கொடூரம்!
கள்ளக்காதலுக்காக பெற்ற மகளை கொலை செய்த தாயை போலீசார் கைது செய்த சம்பவம் ஆந்திராவில் அரங்கேறியுள்ளது.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் மரிக்கவலச கிராமத்தை சேர்ந்தவர் வரலட்சுமி. இவர் தனது கணவனை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இவருக்கு ஒரு மகள் உள்ளார். வரலட்சுமி அவரது மகளும் தனியாக வசித்து வந்த நிலையில் , அதே பகுதியைச் சேர்ந்த ஜெகதீஸ்வர ரெட்டி என்பவருடன் வரலட்சுமிக்கு பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. அவர்கள் இருவரும் தனிமையில் அடிக்கடி இருந்து வந்துள்ளனர்.வரலட்சுமி கள்ளக்காதல் வாழ்க்கைக்கு மகள் தடையாக இருந்ததாக நினைத்த அவர் மகளை கடந்த சில நாட்களுக்கு முன்பு கொலை செய்து கிராம மக்கள் மத்தியில் உடல்நலக்குறைவால் இறந்துவிட்டதாக கூறி புதைத்துள்ளார்.
ஆனால் சிறுமியின் மரணம் தொடர்பாக கிராம மக்களுக்கு சந்தேகம் ஏற்பட இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதைதொடர்ந்து போலீசார் தகவலின் அடிப்படையில் வரலஷ்மி விசாரணை நடத்த அவரை கைது செய்து போலீஸ் வாகனத்தில் ஏற்றிச் செல்ல முற்பட்டுள்ளனர். ஆனால் அப்போது வாகனத்தை வழிமறித்த கிராம மக்கள் கள்ளக்காதலுக்காக மகளை கொலை செய்த இவளை உடனடியாக என்கவுண்டர் செய்யுங்கள் இல்லையென்றால் எங்களிடம் விட்டு விடுங்கள் நாங்கள் அடித்துக் கொல்கிறோம் என்று ஆவேசமாகியுள்ளனர்.
இதையடுத்து கிராம மக்களுடன் போலீசார் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பிறகு வரலட்சுமியை அவர்கள் அங்கிருந்து கைது செய்து அழைத்துச் சென்றனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தெரிகிறது .இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்பட்டுள்ளது.