பேரணாம்பட்டில் கொரோனா பாதிப்பால் தாய் – மகன் பலி!

 

பேரணாம்பட்டில் கொரோனா பாதிப்பால் தாய் – மகன் பலி!

வேலூர்

பேரணாம்பட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட தாய் – மகன் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம், உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு திரு.வி.க.நகரை சேர்ந்தவர் ஆசைத்தம்பி. ஓய்வுபெற்ற கல்வித்துறை அதிகாரி. இவரது மனைவி கிருபாவதி (66). முன்னாள் தலைமை ஆசிரியை. இவர்களது மகன் வைரமுத்து (39). இவருக்கு கடந்த வாரம் திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால், அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

பேரணாம்பட்டில் கொரோனா பாதிப்பால் தாய் – மகன் பலி!

மருத்துவ பரிசோதனையில் கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது, தெரிய வந்ததால் அவர் வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில், கிருபாவதிக்கும் வைரஸ் தொற்று ஏற்பட்டதை அடுத்து, அவர் கடந்த 27ஆம் தேதி வேலூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த சனிக்கிழமை இரவு கிருபாவதியும், தொடர்ந்து ஞாயிற்றுக் கிழமை அதிகாலை வைரமுத்துவும் அடுத்தடுத்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். கொரோனாவால் தாய் – மகன் உயிரிழந்த சம்பவம் பேரணாம்பட்டு பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.