‘கணவனை பிரிந்த துக்கம்’ மகளுடன் மனைவி எடுத்த விபரீத முடிவு!

 

‘கணவனை பிரிந்த துக்கம்’ மகளுடன் மனைவி எடுத்த விபரீத முடிவு!

கள்ளக்குறிச்சி அருகே கணவன் இறந்த துக்கத்தில் மனைவி மற்றும் மகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் பகுதியில் வசித்து வருபவர் லதா. அழகுகலை நிபுணராக பணியாற்றி வந்த , இவருக்கு தர்ஷினி என்ற மகள் இருந்தார். இவரது கணவர் பால முருகன் உடல்நலக்குறைவால் கடந்த 3 மாதங்களுக்கு முன் உயிரிழந்தார். அந்த சோகத்தில் இருந்து மீள முடியாமல் தர்ஷினியும் லதாவும் இருந்துள்ளனர். இதனிடையே தர்ஷினிக்கு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்ததால் அவர் மணக்குள விநாயகர் கல்லூரியில் மருத்துவ படிப்பு படித்து வந்தார்.

‘கணவனை பிரிந்த துக்கம்’ மகளுடன் மனைவி எடுத்த விபரீத முடிவு!

கடந்த சில நாட்களுக்கு முன், லதாவின் அப்பாவுக்கு உடல்நலம் சரியில்லாமல் போனதால் கள்ளக்குறிச்சியில் இருக்கும் மருத்துவமனையில் அவரை அனுமதித்துள்ளனர். இந்த நிலையில், விரக்தியில் இருந்த லதாவும் தர்ஷினியும் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். வீடு திரும்பிய உறவினர்கள் இருவரும் மயங்கிய நிலையில் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்து மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

தகவல் அறிந்து வந்த போலீசார், இருவரின் உடலையும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.