அமெரிக்காவில் தொடர்ந்து 7 நாட்களாக கொரோனா இறப்புகள் ஆயிரத்துக்கு கீழ் பதிவு

 

அமெரிக்காவில் தொடர்ந்து 7 நாட்களாக கொரோனா இறப்புகள் ஆயிரத்துக்கு கீழ் பதிவு

நியூயார்க்: அமெரிக்காவில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து 7-வது நாளாக 1000-க்கு கீழ் பதிவாகியுள்ளது.

கொரோனா பாதிப்பால் உலகில் இதுவரை 4 லட்சத்து 51 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்து உள்ளனர். மொத்தம் இதுவரை 84 லட்சத்து 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதில் 44 லட்சத்து 15 ஆயிரம் பேருக்கு மேல் குணமடைந்துள்ளனர். முதன்முதலில் கொரோனா வைரஸ் சீனாவில் பரவினாலும், கொரோனா பலி எண்ணிக்கை பட்டியலில் அந்நாடு தற்போது 18-வது இடத்திற்கு சென்று விட்டது.

அமெரிக்காவில் தொடர்ந்து 7 நாட்களாக கொரோனா இறப்புகள் ஆயிரத்துக்கு கீழ் பதிவு

ஆனால் இத்தாலி, ஸ்பெயின், அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன், ஈரான், பெல்ஜியம், ஜெர்மனி ஆகிய நாடுகளில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை மிக அதிகளவில் உள்ளது. குறிப்பாக கொரோனாவால் அதிகம் பேர் உயிரிழந்த நாடாக அமெரிக்கா உள்ளது. அமெரிக்காவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 17 ஆயிரத்தை கடந்துள்ளது. அமெரிக்காவில் கொரோனா தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் 840 பேருக்கு மேல் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் அமெரிக்காவில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து 7-வது நாளாக 1000-க்கு கீழ் பதிவாகியுள்ளது.