அமெரிக்காவில் 24 மணி நேரத்தில் 425 பேர் கொரோனாவால் உயிரிழப்பு

 

அமெரிக்காவில் 24 மணி நேரத்தில் 425 பேர் கொரோனாவால் உயிரிழப்பு

நியூயார்க்: அமெரிக்காவில் 24 மணி நேரத்தில் 425 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா பாதிப்பால் உலகில் இதுவரை 4 லட்சத்து 74 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்து உள்ளனர். மொத்தம் இதுவரை 91 லட்சத்து 94 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதில் 49 லட்சத்து 41 ஆயிரம் பேருக்கு மேல் குணமடைந்துள்ளனர். முதன்முதலில் கொரோனா வைரஸ் சீனாவில் பரவினாலும், கொரோனா பலி எண்ணிக்கை பட்டியலில் அந்நாடு தற்போது 18-வது இடத்திற்கு சென்று விட்டது.

அமெரிக்காவில் 24 மணி நேரத்தில் 425 பேர் கொரோனாவால் உயிரிழப்பு

ஆனால் இத்தாலி, ஸ்பெயின், அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன், ஈரான், பெல்ஜியம், ஜெர்மனி ஆகிய நாடுகளில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை மிக அதிகளவில் உள்ளது. குறிப்பாக கொரோனாவால் அதிகம் பேர் உயிரிழந்த நாடாக அமெரிக்கா உள்ளது. அமெரிக்காவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 120,000 ஆக உள்ளது. அமெரிக்காவில் கொரோனா தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் 425 பேருக்கு மேல் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் அமெரிக்காவில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து 12-வது நாளாக 1000-க்கு கீழ் பதிவாகியுள்ளது. இதுவரை அமெரிக்காவில் 22 லட்சத்து 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.