இன்னும் ஒரு மாதத்தில் குழந்தை பெற காத்திருந்த பெண்ணிற்கு நடந்த சோகம்!

 

இன்னும் ஒரு மாதத்தில் குழந்தை பெற காத்திருந்த பெண்ணிற்கு நடந்த சோகம்!

நிதின் சந்திரன் என்பவர் தனது கர்ப்பிணி மனைவி அதிரா கீதா ஸ்ரீதரனை துபாயிலிருந்து சொந்த ஊர் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விமானத்தில் கேரளாவிற்கு அனுப்பி வைத்திருந்தார். ஊருக்குச் சென்ற அதிராவுக்கு இன்னும் ஒரு மாதத்தில் குழந்தை பிறக்க இருந்தது. ஆனால் அதிராவுக்கு ஒரு அதிர்ச்சித் தகவல் கிடைத்தது. துபாயில் இருந்த அவரது கணவர் நிதின் சந்திரன் இருதய நோயால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளார் என்ற தகவல் அதிராவுக்கு தெரிய வந்துள்ளது.

 

இன்னும் ஒரு மாதத்தில் குழந்தை பெற காத்திருந்த பெண்ணிற்கு நடந்த சோகம்!

தனது பிரசவத்திற்காக கேரளாவில் சொந்த ஊருக்குத் திரும்பிச் செல்ல அனுமதிக்க வேண்டி உச்சநீதிமன்றத்தை நாடி பின் அனுமதி பெற்று கேரளா திரும்பியதை நினைவு கூர்ந்தார் அதிரா. நிறைமாத கர்ப்பிணிகள் விமானத்தில் பயணம் செய்வதை தடை செய்வதால் முன்னதாகவே கேரளாவிற்கு திரும்பியுள்ளார் அதிரா. நிதின் துபாயில் உள்ள ஒரு கன்ஸ்ட்ரக்சன் கம்பெனியில் மெக்கானிக்கல் என்ஜினீயராக பணிபுரிந்து வந்துள்ளார்.

இன்னும் ஒரு மாதத்தில் குழந்தை பெற காத்திருந்த பெண்ணிற்கு நடந்த சோகம்!

“அதிராவை பத்திரமாக கேரளாவிற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்பதே எனது விருப்பம், நானும் சேர்ந்துபோக வேண்டியதில்லை” என ஏப்ரல் மாதத்தில் கல்ப் நியூஸிற்கு நிதின் பேட்டி அளித்துள்ளார்.

அறிக்கைகளின் படி, நிதின் ஏற்கனவே உயர் இரத்த அழுத்தத்திற்கு சிகிச்சை பெற்று வந்திருக்கிறார். தூக்கத்தில் இருக்கும் போது மாரடைப்பு ஏற்பட்டு இறந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்பதாக அவரது நண்பர்கள் தெரிவித்துள்ளனர். நிதின் இறப்பு குறித்த அறிந்த குடும்பத்தினர் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.