பருவமழை தீவிரம் : பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளாக 4,133 இடங்கள் கண்டுபிடிப்பு!

 

பருவமழை தீவிரம் :  பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளாக 4,133 இடங்கள் கண்டுபிடிப்பு!

பருவமழை தீவரம் அடைந்துள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தயாராக உள்ளதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

பருவமழை தீவிரம் :  பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளாக 4,133 இடங்கள் கண்டுபிடிப்பு!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் தமிழகத்தில் ஏரிகள் பல நிரம்பி வழிகின்றன.இந்நிலையில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ” தமிழகத்தில் இயல்பு நிலையை விட 40 சதவீதம் குறைவாக வடகிழக்கு பருவமழை இதுவரை பெய்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையால் பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளாக 4,133 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

பருவமழை தீவிரம் :  பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளாக 4,133 இடங்கள் கண்டுபிடிப்பு!

அதிக பாதிப்பிற்கு உள்ளாகும் பகுதிகளாக 297 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. கடலோர மாவட்டங்களில் வடகிழக்கு பருவ மழையின் தாக்கம் அதிகமாக உள்ளது. 36 மாவட்டங்களுக்கு கண்காணிப்பு மற்றும் அறிவுரைகளை வழங்கும் அனுபவம் வாய்ந்த அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் தண்ணீர் தேங்கும் பகுதிகளில் அடையாளம் காணப்பட்டு நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்றார்.