நாடு முழுக்க 2 வாரங்களுக்கு முன்பே பெய்த பருவ மழை – இந்திய வானிலை ஆய்வு மையம்

 

நாடு முழுக்க 2 வாரங்களுக்கு முன்பே பெய்த பருவ மழை – இந்திய வானிலை ஆய்வு மையம்

டெல்லி: இந்தாண்டு நாடு முழுக்க 2 வாரங்களுக்கு முன்பே பருவ மழை பெய்ய ஆரம்பித்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

பருவ மழைக் காலம் நாடு முழுவதும் தொடங்கியுள்ளது. எதிர்பார்த்த தேதியை விட இரண்டு வாரங்கள் முன்னதாகவே நாடு முழுக்க இந்தாண்டு பருவ மழை பெய்யத் தொடங்கியிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று ராஜஸ்தான், ஹரியானா மற்றும் பஞ்சாப் ஆகிய பகுதிகளிலும் பருவ மழை பெய்தது. டெல்லி மற்றும் ராஜஸ்தானின் சில மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்தது.

நாடு முழுக்க 2 வாரங்களுக்கு முன்பே பெய்த பருவ மழை – இந்திய வானிலை ஆய்வு மையம்

வழக்கமாக ஜூன் 1-ஆம் தேதி பருவ மழை கேரளாவில் பெய்யும். ஆனால் இந்தாண்டு முன்கூட்டியே பெய்யத் தொடங்கி விட்டது. அடுத்த மூன்று நாட்களுக்கு டெல்லி, ஹரியானா மற்றும் சண்டிகர் ஆகிய இடங்களில் மழை அளவு குறைவாகவே இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. நேற்று கடும் இடியுடன் கூடிய கனமழை காரணமாக மின்னல் தாக்கி பீகாரில் 88 பேரும், உத்தரப்பிரதேசத்தில் 24 பேரும் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.