துடிக்க துடிக்க குரங்கை தூக்கிலிட்டு கொலை செய்த கொடூரர்கள்!

 

துடிக்க துடிக்க குரங்கை தூக்கிலிட்டு கொலை செய்த கொடூரர்கள்!

தெலுங்கானா மாநிலம், கம்மம் மாவட்டம், அம்மா பாளையம் கிராமத்தில் வசிக்கும் வெங்கடேஸ்வர ராவ் வீட்டில் உள்ள குடிநீர் தொட்டியில் தண்ணீர் குடிக்க குரங்கு ஒன்று வந்தது. எதிர்பாராதவிதமாக அந்த குரங்கு தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து தத்தளித்துக் கொண்டிருந்தது. தாகம் தீர்த்துக் கொள்ள வந்து தண்ணீர் தொட்டியில் விழுந்து தத்தளித்து கொண்டிருக்கும் குரங்கை காப்பாற்ற வேண்டிய வெங்கடேஸ்வராவ், அதனை அடித்து துன்புறுத்தி, மரக்கிளையில் தூக்குமாட்டி கொலை செய்தார்.

துடிக்க துடிக்க குரங்கை தூக்கிலிட்டு கொலை செய்த கொடூரர்கள்!

மரக்கிளையில் தூக்கில் தொங்கிய குரங்கு உயிருக்கு போராடிக் கொண்டிருந்த போது அந்தப்பகுதியில் உள்ள நாய்கள் அதனை கடித்து குதறின. சாதாரண மனிதர்கள் நினைத்துக்கூட பார்க்க இயலாத வகையில் அந்தக் குரங்கை கொலை செய்த வெங்கடேஸ்வர ராவ் அதன் உடலை நாய்களுக்கு உணவாக வீசியெறிந்தார். இதனை கவனித்து அந்தப் பகுதியில் உள்ள மற்ற குரங்குகள் அங்கு வந்து கொலை செய்யப்பட்டு வீசியெறிந்த குரங்கின் உடலை நாய்கள் நெருங்காதவாறு பார்த்துக் கொண்டன.

வெங்கடேஸ்வராவின் இந்த செயலுக்கு வீட்டிற்கு பக்கத்து வீட்டில் வசிக்கும் ஜோசப் ராஜ் என்பவரும் உடந்தையாக இருந்துள்ளார். இது தொடர்பான வீடியோ தற்போது வெளியாகி ஆந்திரா தெலுங்கானா மாநிலங்களில் பரபரப்பை ஏற்படுத்தியதையடுத்து சம்பவம் தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.