கர்ப்பிணிப் பெண்ணைக் கற்பழித்த துறவி… பல பெண்களிடம் அத்துமீறியது அம்பலம்!

 

கர்ப்பிணிப் பெண்ணைக் கற்பழித்த துறவி… பல பெண்களிடம் அத்துமீறியது அம்பலம்!

கர்பிணிப்பெண்ணை கற்பழித்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஜெயின் துறவியிடமிருந்து
பென் டிரைவ்கள், ஆணுறை பாக்கெட்டுகள் மற்றும் இரண்டு மடிக்கணினிகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இந்த சம்பவம் ராஜஸ்தானின் கராளி மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது.

துறவி மீது கற்பழிப்பு குற்றம் சுமத்தப்பட்டபின்னர் போலீசார் அவரது இருப்பிடத்தை சோதனை செய்தனர். அந்தத் துறவி தங்கியிருந்த இடத்தில் சோதனையிட்ட போது
அங்கு ஒரு பெரிய பை கண்டுபிடிக்கப்பட்டது. பையைத் திறந்ததும், விசாரணை அதிகாரிகள் 19 மொபைல் போன்கள், இரண்டு மடிக்கணினிகள், நான்கு ஹார்ட் டிஸ்க்குகள், ஆணுறை பாக்கெட்டுகள் மற்றும் 33 பென் டிரைவ்களைக் கண்டுபிடித்தனர். அங்கிருந்த ஹார்ட்டிஸ்குகளை ஆய்வு செய்த போது அவற்றில் ஏராளமான ஆபாச விடியோக்கள் இருந்துள்ளது.

கர்ப்பிணிப் பெண்ணைக் கற்பழித்த துறவி… பல பெண்களிடம் அத்துமீறியது அம்பலம்!

தகவல்களின்படி, சுகுமால் நந்தி என அடையாளம் காணப்பட்ட 38 வயதான ஜெயின் துறவி, கர்ப்பிணிப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் குற்றம் சட்டப்பட்டுள்ளார். பின் இதுபற்றி வெளியேகூறினால் தனது அதிகாரத்தைபயன்படுத்திஅவர்கள்குடும்பத்தை அழித்துவிடுஎவேன் என்று மிரட்டுயுள்ளார். பின் அங்கிருந்து தப்பிச் சென்ற பெண் நடந்த சம்பவத்தை வீட்டில் கூற, பின் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின் அந்த துறவி கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகிறார்.