காயளான் கடை உரிமையாளர் உள்பட இருவரிடம் கத்தி முனையில் பணம், செல்போன் பறிப்பு

 

காயளான் கடை உரிமையாளர் உள்பட இருவரிடம் கத்தி முனையில் பணம், செல்போன் பறிப்பு

சென்னை

குன்றத்தூரில் காயளான் கடை உரிமையாளர் உள்ளிட்ட இருவரை கத்தியால் வெட்டிவிட்டு, மர்மநபர்கள் பணம் மற்றும் செல்போனை பறித்துச்சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னை குன்றத்தூர் அருகே வண்டலூர் – மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் காயளான் கடை நடத்தி வருபவர் ஜான்சன். இவர் நேற்று இரவு கடையில் இருந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் கொண்ட கும்பல், ஜான்சனை கத்தியால் வெட்டிவிட்டு அவரிடம் இருந்த செல்போனை பறித்துள்ளது. மேலும், கடையின் அருகே படுத்திருந்த கணேசன் என்பவரையும் அந்த கும்பல் கத்தியால் தாக்கிவிட்டு, அவரிடமிருந்த 15 ஆயிரம் ரூபாய் பணத்தையும் பறித்துச்சென்றனர்.

காயளான் கடை உரிமையாளர் உள்பட இருவரிடம் கத்தி முனையில் பணம், செல்போன் பறிப்பு

இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் பேரில் குன்றத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்மநபர்களை தேடி வருகின்றனர். கடந்த வாரம் குன்றத்தூர் பகுதியில் பெட்ரோல் இல்லாததால் மோட்டார் சைக்கிளை தள்ளிச்சென்ற இளைஞரை மர்மநபர்கள் கத்தியால் தாக்கிவிட்டு, செல்போன் பறித்து சென்ற நிலையில் மீண்டும் நடைபெற்ற கொள்ளை சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. இந்த நிலையில், வழிப்பறி சம்பவங்களை தடுக்கும் விதமாக வண்டலூர் – மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.