கொரோனா தடுப்பு பணிகள் குறித்து மாநில முதல்வர்களுடன், பிரதமர் மோடி ஆலோசனை!

 

கொரோனா தடுப்பு பணிகள் குறித்து மாநில முதல்வர்களுடன், பிரதமர் மோடி ஆலோசனை!

இந்தியாவில் கொரோனா  வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டிய நிலையில்,  உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8 ஆயிரத்து 553 ஆக உயர்ந்துள்ளது. நாளுக்கு நாள் தொடர்ந்து கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருவதால், அரசு அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதற்கு இன்னும் முறையான மருந்து கண்டுபிடிக்கப் படாததால் உலக நாடுகள் திணறி வருகின்றன.

ttn

இந்நிலையில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து மாநில முதல்வர்களுடன், பிரதமர் மோடி ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளார். வரும் 16 மற்றும் 17 ஆம் தேதிகளில் இரண்டு கட்டமாக காணொலி மூலம் ஆலோசனை நடத்தவுள்ளார். ஊரடங்கு தொடங்கியதிலிருந்து ஏழாவது முறையாக மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளார்.

நாடு முழுவதும் ஜூன் 30 ஆம் தேதி ஊரடங்கு முடிவடைய உள்ளதால் கொரோனா பரவல் மற்றும் தடுப்பு பணிகள் தொடர்பான பல விஷயங்கள் குறித்து விவாதம் நடைபெறும் என்று தெரிகிறது. இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில் சமூக பரவல் ஏற்பட்டுள்ளதா என்ற கேள்வி எழுகிறது.