அனைத்து மாநில ஆளுநர்களுடனும் பிரதமர் மோடி ஆலோசிக்க திட்டம்

 

அனைத்து மாநில ஆளுநர்களுடனும் பிரதமர் மோடி ஆலோசிக்க திட்டம்

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை பரவல் தலை தூக்கியுள்ள நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 1.68 லட்சம் பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனிடையே ஏற்கனவே அனைத்து மாநில முதல்வர்களுடனும் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டார்.

அனைத்து மாநில ஆளுநர்களுடனும் பிரதமர் மோடி ஆலோசிக்க திட்டம்

நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்துவரும் சூழலில், கொரோனா தடுப்பூசி விநியோகமும் முடுக்கிவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் அனைத்து மாநில ஆளுநர்கள், துணைநிலை ஆளுநர்களுடன் பிரதமர் மோடி, வரும் 14ந் தேதி ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளார். கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக காணொலி மூலம் ஆலோசிக்கவுள்ளார். பிரதமர் மோடியுடன் குடியரசு துணை தலைவர் வெங்கய்ய நாயுடுவும் காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளடு.