‘கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு’ : மீண்டும் திருக்குறளை மேற்கோள் காட்டிய மோடி!

 

‘கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு’ : மீண்டும் திருக்குறளை மேற்கோள் காட்டிய மோடி!

பிரதமர் நரேந்திர மோடி, பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக புதுச்சேரிக்கு சென்றிருக்கிறார். டெல்லியில் இருந்து இன்று காலை 9 மணிக்கு புறப்பட்ட பிரதமர் மோடி, தனி விமானத்தின் மூலம் சென்னை விமான நிலையம் வந்து சேர்ந்தார். இங்கிருந்து ஹெலிகாப்டரில் புதுச்சேரிக்கு புறப்பட்டார். புதுச்சேரியின் ஜிப்மர் பகுதியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி, லாஸ்பேட்டையில் ரூ.12 கோடியில் 100 படுக்கைகளுடன் கூடிய வீராங்கனைகளுக்கான விடுதியையும், ஜிப்மரில் ரூ.28 கோடியில் ஆராய்ச்சி கூடாதுதான் கூடிய ரத்த வங்கியையும் திறந்து வைத்தார்.

‘கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு’ : மீண்டும் திருக்குறளை மேற்கோள் காட்டிய மோடி!

இதைத் தொடர்ந்து, புதுவை இந்திராகாந்தி விளையாட்டு திடலில் ரூ.7 கோடியில் செயற்கை ஓடுதளம் அமைக்கவும் சாகர்மாலா திட்டத்தில் ரூ.44 கோடியில் சிறிய துறைமுகம் அமைக்கவும் ஜிப்மர் மருத்துவக் கல்லூரியின் காரைக்கால் கிளையில் ரூ.491 கோடி புதிய கட்டிடத்திற்கும் காரைக்கால் மாவட்டத்தை உள்ளடக்கிய சட்டநாதபுரம் – நாகை NH45A நெடுஞ்சாலைக்கும் அடிக்கல் நாட்டினார்.

‘கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு’ : மீண்டும் திருக்குறளை மேற்கோள் காட்டிய மோடி!

இதையடுத்து நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, புதிய நான்கு வழி சாலை புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும். சுகாதாரத் துறையில் முதலீடு செய்யும் நாடுகள் பிரகாசிக்கும். புதுச்சேரியில் வாழும் மக்கள் பல மொழிகளை பேசினாலும் ஒற்றுமையின் அடையாளமாகத் திகழ்கின்றனர். கிராமப்புற, கடற்கரை இணைப்பை அதிகரிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என்று கூறினார். மேலும், ‘கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு மாடல்ல மற்ற யவை’ என்ற திருக்குறளை மேற்கோள் காட்டி பேசினார்.