நன்கு திட்டமிட்டு இந்தியாவை படுகுழியில் தள்ளிய மோடி! – ராகுல் காந்தி தாக்கு

 

நன்கு திட்டமிட்டு இந்தியாவை படுகுழியில் தள்ளிய மோடி! – ராகுல் காந்தி தாக்கு

கொரோனா பாதுகாப்பில் மோடி அரசு திட்டமிட்டு செயல்பட்டு இந்தியாவை படுகுழியில் தள்ளிவிட்டது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.

நன்கு திட்டமிட்டு இந்தியாவை படுகுழியில் தள்ளிய மோடி! – ராகுல் காந்தி தாக்கு


கொரோனா தடுப்பு, கண்காணிப்பு, சிகிச்சையில் மத்திய அரசு தன்னுடைய கடமையை செய்யத் தவறிவிட்டது என்று ராகுல் காந்தி தொடர்ந்து விமர்சித்து வருகிறார். ராகுல் காந்தி கொரோனா பரவல் எச்சரக்கைவிடுத்த போது எல்லாம் மத்திய அமைச்சர் வதந்தி பரப்ப வேண்டாம் என்று எச்சரித்தார். தற்போது கொரோனாவால் இந்தியப் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் ராகுல் காந்தி ட்வீட் வெளியிட்டுள்ளார்.


அதில், “மோடி அரசு கோவிட்-க்கு எதிராக திட்டமிட்டு போராடுவதாகக் கூறி இந்தியாவை படுகுழியில் தள்ளிவிட்டுவிட்டது.

நன்கு திட்டமிட்டு இந்தியாவை படுகுழியில் தள்ளிய மோடி! – ராகுல் காந்தி தாக்கு


நாட்டின் உள்நாட்டு மொத்த உற்பத்தி 24 சதவிகிதம் குறைந்துள்ளது. 12 கோடி பேர் வேலை இழந்துள்ளனர். 15.5 லட்சம் கோடி அளவுக்கு கடன் சுமை அதிகரித்துள்ளது. தினசரி கோவிட் நோய்த் தொற்றில் உலக அளவில் இந்தியா முதல் இடத்தில் உள்ளது. ஆனால், இந்திய அரசும் ஊடகமும் அனைத்தும் சரியாகிவிட்டது என்று கூறி வருகின்றன” எனத் தெரிவித்துள்ளார்.