“மோடி மயில்களுடன் பிசியாக உள்ளார்” – ராகுல் காந்தி விமர்சனம்!

 

“மோடி மயில்களுடன் பிசியாக உள்ளார்” – ராகுல் காந்தி விமர்சனம்!

பிரதமர் மோடி மயில்களுடன் பிசியாக இருப்பதால் நம்மை நாம்தான் காத்துக்கொள்ள வேண்டும் என்று ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

“மோடி மயில்களுடன் பிசியாக உள்ளார்” – ராகுல் காந்தி விமர்சனம்!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு காரணமாக மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகின்றன. ஆனால் மத்திய அரசின் நடவடிக்கை திருப்திகரமாக இல்லை என்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு பதிலாக ஊரடங்கு பிறப்பித்து மக்களின் வாழ்வாதாரத்தை அரசு கேள்விக்குறியாக்கி விட்டது என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகின்றன.

இந்நிலையில் முன்னாள் காங்கிரஸ் தலைவரும் எம்பியுமான ராகுல் காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில், “பிரதமர் மோடி மயில்களுடன் பிசியாக இருப்பதால் நம்மை நாம்தான் காத்துக்கொள்ள வேண்டும். இந்தியாவில் கொரோனா பாதிப்பு இந்த வாரத்தில் 50 லட்சத்தை எட்டிவிடும். திட்டமிடப்படாத பொதுமுடக்கம் ஒரு நபரின் ஈகோவின் விளைவாகும்” என்று கூறியுள்ளார்.

முன்னதாக பிரதமர் மோடி மயிலுக்கு தான் உணவளிக்கும் வீடியோவை இணையத்தில் வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.