“காங்கிரஸை விமர்சிக்க மோடிக்கு தகுதியில்லை” நாராயணசாமி ஆவேசம்!!

 

“காங்கிரஸை விமர்சிக்க மோடிக்கு தகுதியில்லை” நாராயணசாமி ஆவேசம்!!

காங்கிரஸை விமர்சிக்க மோடிக்கு தகுதியில்லை என்று புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

“காங்கிரஸை விமர்சிக்க மோடிக்கு தகுதியில்லை” நாராயணசாமி ஆவேசம்!!

பிரதமர் மோடி நேற்று கோவை கொடிசியாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார். அப்போது பேசிய அவர், திமுக, காங்கிரஸ் கூட்டணி மக்களுக்கு எந்த நல்லதையும் செய்யவில்லை. திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் அப்பாவி பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். அம்மா ஜெயலலிதாவுக்கு திமுக எப்படியெல்லாம் தொல்லை கொடுத்தது என்பது உங்களுக்கு தெரியும். திமுகவும் காங்கிரஸும் எப்படி கொள்ளையடிக்கலாம் என்று பார்ப்பார்கள். சமூக விரோதிகளை தங்கள் பக்கம் வைத்து கொள்வார்கள். ஜெயலலிதாவுக்கு தொல்லை கொடுத்தவர்களுக்கு காங்கிரஸும் திமுகவும் பரிசுகள் கொடுத்து பாராட்டின ” என்றார்

“காங்கிரஸை விமர்சிக்க மோடிக்கு தகுதியில்லை” நாராயணசாமி ஆவேசம்!!

இந்நிலையில் புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களை சந்தித்த போது, ” புதுச்சேரியில் இருந்த காங்கிரஸ் அரசை விமர்சிக்க பிரதமர் மோடிக்கு என்ன தகுதி உள்ளது? காங்கிரஸை விமர்சிக்க மோடிக்கு தகுதியில்லை. பிரதமர் தொடங்கி வைத்த நெடுஞ்சாலைத் திட்டம் 2014 இல் காங்கிரஸ் ஆட்சியில் அடிக்கல் நாட்டப்பட்டது . பல ஆண்டுகளுக்கு முன் முடிவு செய்யப்பட்ட திட்டங்களை தொடங்கி வைத்து பிரதமர் ஏமாற்றுகிறார் ” என்றார்.