மோடி வருகை; தலைகீழாக மாறும் புதுச்சேரி

 

மோடி வருகை; தலைகீழாக மாறும் புதுச்சேரி

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில், அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. ஆங்காங்கே அரசியல் தலைவர்கள் அதிரடி பிரச்சாரம் மேற்கொண்டு வரும் நிலையில், பிரதான கட்சிகளான திமுக மற்றும் அதிமுகவுடன் கூட்டணி அமைத்திருக்கும் தேசிய கட்சிகளின் முக்கிய பிரமுகர்கள் அவ்வப்போது தமிழகம் வந்து மக்களை ஈர்த்துவருகின்றனர். அதிமுகவுடன் கூட்டணி அமைத்திருக்கும் பாஜகவின் முக்கிய தலைவரான பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் தொடர்ந்து சென்னைக்கு வருகை தந்துக்கொண்டிருக்கின்றனர்.

மோடி வருகை; தலைகீழாக மாறும் புதுச்சேரி

இந்த சூழலில் புதுச்சேரியில் நாளை நடைபெறவுள்ள பாஜக தேர்தல் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்கவுள்ளார். பிரதமர் மோடியின் வருகையையொட்டி, புதுச்சேரியில் கிழக்கு கடற்கரை சாலையில் மடுவுபேட் முதல் ராஜீவ்காந்தி சிக்னல் வரை வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை என போக்குவரத்து போலீசார் அறிவித்துள்ளனர். புதுச்சேரி நகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம் காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் அரசு, தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில பள்ளிக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.