“உங்களின் மன உறுதியால் வெற்றிபெற்றீர்கள்; நாடே பெருமை கொள்கிறது” – இந்திய அணிக்கு மோடி, அமித் ஷா வாழ்த்து!

 

“உங்களின் மன உறுதியால் வெற்றிபெற்றீர்கள்; நாடே பெருமை கொள்கிறது” – இந்திய அணிக்கு மோடி, அமித் ஷா வாழ்த்து!

ஆஸ்திரேலியாவில் வரலாற்று வெற்றி பெற்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடியும், மத்திய அமைச்சர் அமித் ஷாவும் வாழ்த்து தெரிவித்திருக்கின்றனர்.

அசுரபலம் கொண்ட ஆஸ்திரேலிய அணியை அவர்களின் மண்ணிலேயே மண்ணைக் கவ்வ வைத்துள்ளது இந்திய அணி. பாகுபாடின்றி கிரிக்கெட்டர்கள் அனைவரும் இந்திய அணியைப் பாராட்டிவருகின்றனர். தற்போது சரித்திர வெற்றிபெற்ற இந்திய அணிக்கு பிரதமர் நரேந்திர மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

“உங்களின் மன உறுதியால் வெற்றிபெற்றீர்கள்; நாடே பெருமை கொள்கிறது” – இந்திய அணிக்கு மோடி, அமித் ஷா வாழ்த்து!

பிரதமர் மோடி தன்னுடைய ட்வீட்டில், “ஆஸ்திரேலியாவில் இந்திய அணி வெற்றிபெற்றதை நாங்கள் அனைவரும் மகிழ்ச்சியாகக் கண்டுகளித்தோம். கிரிக்கெட் மீதான உங்களின் ஆர்வத்தையும் ஆற்றலையும் உலகுக்கு உணர்த்தியுள்ளீர்கள்.

வெற்றிபெற வேண்டும் என்ற உணர்வும் உறுதியும் உங்களிடம் இருந்ததால் தான் இத்தகைய வெற்றியைப் பெற்றிருக்கிறீர்கள். அணிக்கு என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். வருங்காலங்களிலும் உங்களின் முயற்சிகள் வெற்றிகாண வாழ்த்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சர் அமித் ஷா, “ஆஸ்திரேலியாவில் சரித்திர வெற்றி கண்ட இந்திய அணிக்கு எனது வணக்கம். உங்களின் சாதனைகளைக் கண்டு ஒட்டுமொத்த இந்தியாவும் பெருமிதம் கொள்கிறது” என்று ட்வீட் செய்துள்ளார்.