பாஜகவுக்கு மரண அடி…வெற்றி களிப்பில் திருமா

 

பாஜகவுக்கு மரண அடி…வெற்றி களிப்பில் திருமா

பாரதிய ஜனதாவுக்கு மக்கள் மரண அடி கொடுத்திருக்கிறார்கள் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

பாஜகவுக்கு மரண அடி…வெற்றி களிப்பில் திருமா

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த எம்.பி. திருமாவளவன், ” பாரதிய ஜனதாவுக்கு மக்கள் மரண அடி கொடுத்திருக்கிறார்கள் . மேற்குவங்கத்தில் 200 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்றிருக்கிறார் மம்தா பானர்ஜி. அவர் அங்கு இமாலய வெற்றியைப் பெற்றிருக்கிறார்.ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்துவிட்ட கேரளாவில் பினராயி மீண்டும் அமரவுள்ளார். அங்கு பாஜக ஒரு இடத்தில் கூட வெற்றிபெற முடியாத அளவுக்கு மக்கள் வாக்களித்து தோற்கடித்து இருக்கிறார்கள். பாட்டாளி மக்கள் கட்சியையும், அதிமுக ஆட்சியையும் பயன்படுத்தி அவர்களின் முதுகில் ஏறி சவாரி செய்து பெரிய சக்தியாக , அரசியல் சக்தியாக வலிமைபெற வேண்டும் என்று கணக்கு போட்ட பாரதிய ஜனதா கட்சி படுதோல்வியை சந்தித்து இருக்கிறது . தமிழ்நாடு சமூகநீதி மண், பெரியார் மண் என்பதை மக்கள் உணர்த்தி இருக்கிறார்கள். அவர்களுக்கு என் நன்றிகள். கொள்கைக் கூட்டணியை உருவாக்கி மகத்தான வெற்றியைப் பெற்ற மு.க. ஸ்டாலினுக்கு எனது வாழ்த்துகள்.

பாஜகவுக்கு மரண அடி…வெற்றி களிப்பில் திருமா

சட்டப்பேரவை தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 4 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் பாடுபடும் ஒரு கட்சி தனி சின்னத்தில் போட்டியிட்டு 4 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது என்பது வரலாற்றில் இதுவே முதல்முறையாக நடந்துள்ளது. சனாதனத்துக்கு எதிரான போராட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் 4 எம்எல்ஏக்களை தேர்வு செய்துள்ள மக்களுக்கு நன்றி ” என்றார். தொடர்ந்து பேசிய அவர், “”மூன்று மாநில தேர்தலில் பாஜக தோல்வி அடைந்துள்ளதால் அதற்கு பொறுப்பேற்று மோடி, அமித்ஷா பதவி விலக வேண்டும்” என்றும் அவர் கோரிக்கை வைத்தார்.