தமிழகத்தில் நகரும் ரேஷன் கடைகள் நாளை மறுநாள் தொடக்கம்!

 

தமிழகத்தில் நகரும் ரேஷன் கடைகள் நாளை மறுநாள் தொடக்கம்!

நகரும் ரேஷன் கடைகள் தமிழகத்தில் நாளை மறுநாள் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நகரும் ரேஷன் கடைகள் விரைவில் இயக்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன் படி வரும் திங்கள் கிழமை காலை 1,501 நகரும் ரேஷன் கடைகளை முதல்வர் பழனிசாமி தொடக்கி வைக்க உள்ளார். நடமாடும் ரேஷன் கடைகளை திறக்க முதல்வரின் வருகையையொட்டி, அந்த விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

தமிழகத்தில் நகரும் ரேஷன் கடைகள் நாளை மறுநாள் தொடக்கம்!

நவீன காலத்தை நோக்கி மக்கள் சென்று கொண்டிருக்கையில், மக்களின் நேரத்தை குறைக்கும் பொருட்டு இந்த நடமாடும் ரேஷன் கடைகள் தொடங்கப்பட உள்ளன. இது மக்களிடையே நல்ல வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.