சென்னையில் நடமாடும் அம்மா உணவகங்கள் தொடக்கம்!

 

சென்னையில் நடமாடும் அம்மா உணவகங்கள் தொடக்கம்!

சென்னையில் நடமாடும் அம்மா உணவகங்களை முதல்வர் பழனிசாமி தொடக்கி வைத்தார்.

கொரோனா காலத்தில் நாடே முடங்கிக் கிடந்த போதும், ஆயிரக் கணக்கான மக்களின் பசியாற்றியது அம்மா உணவகங்கள். குறிப்பாக, பொது முடக்கத்தால் பொருளாதார ரீதியாக கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த மக்களுக்கு தமிழக அரசு, அம்மா உணவகங்களின் மூலம் இலவசமாக உணவு வழங்கியது. இந்த சேவை மக்களிடையே வரவேற்பை பெற்றது.

சென்னையில் நடமாடும் அம்மா உணவகங்கள் தொடக்கம்!

இந்த சேவையை இன்னும் விரிவுப்படுத்த எண்ணிய சென்னை மாநகராட்சி, தொழிலாளர்கள் இருக்கும் இடத்திற்கே சென்று உணவு வழங்க திட்டமிட்டது. அதன் படி, நடமாடும் அம்மா உணவகங்கள் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த நிலையில், சென்னையில் நடமாடும் அம்மா உணவகங்களை தலைமை செயலகத்தில் இருந்து முதல்வர் பழனிசாமி கொடியசைத்து துவக்கி வைத்தார்.

வடசென்னை, தென்சென்னை, மத்திய சென்னைக்காக 3 நடமாடும் அம்மா உணவகங்கள் தொடங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.