மதுரவாயலில் பத்மபிரியாவுக்கு 3ஆவது இடம்… அமைச்சர் பெஞ்சமின் தோல்வி!

 

மதுரவாயலில் பத்மபிரியாவுக்கு 3ஆவது இடம்… அமைச்சர் பெஞ்சமின் தோல்வி!

மதுரவாயல் தொகுதியில் அமைச்சர் பெஞ்சமின் போட்டியிட்டார். ஆனால் அதைக் காட்டிலும் சென்னை தமிழச்சி பத்மபிரியா மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிட்டதால் ஸ்டார் தொகுதி என்ற அந்தஸ்தை பெற்றது. இதனால் மதுரவாயல் தேர்தல் முடிவுகள் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. திமுக சார்பில் காரப்பாக்கம் கணபதி போட்டியிட்டார்.

மதுரவாயலில் பத்மபிரியாவுக்கு 3ஆவது இடம்… அமைச்சர் பெஞ்சமின் தோல்வி!

இன்று காலை 8 மணி தொடங்கிய வாக்கு எண்ணிக்கையில் அமைச்சர் பெஞ்சமினும் பத்மபிரியாவும் பின்னடைவிலேயே இருந்தனர். காரப்பாக்கம் கணபதி மட்டுமே முன்னிலையில் இருந்து வந்தார். தற்போது அனைத்துச் சுற்று வாக்குகளும் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது. முடிவில் அமைச்சரை வீழ்த்தி கணபதி 31 ஆயிரத்து 231 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றிருக்கிறார். பத்மபிரியாவுக்கு மூன்றாவது இடம் கிடைத்துள்ளது.