‘பணத்தை மறந்துட்டு…’ வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த பத்மபிரியா!

 

‘பணத்தை மறந்துட்டு…’ வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த பத்மபிரியா!

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் கடந்த 12ம் தேதி தொடங்கியது. அன்றே துணை முதல்வர் ஓபிஎஸ் வேட்பு மனு தாக்கல் செய்து பிள்ளையார் சுழி போட்டு வைத்தார். அவரைத் தொடர்ந்து, நல்ல நாள் பார்த்து நேற்று முதல்வர் வேட்பாளர்கள் எல்லாரும் மனு தாக்கல் செய்தார்கள். மு.க ஸ்டாலின், ஈபிஎஸ், டிடிவி தினகரன், சீமான் என லிஸ்ட் நீண்டு கொண்டே சென்றது.

‘பணத்தை மறந்துட்டு…’ வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த பத்மபிரியா!

அந்த வகையில் நேற்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனும் வேட்பு மனுத் தாக்கல் செய்தார். இந்த நிலையில், மதுரவாயல் தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர் பத்ம பிரியா வேட்பு மனு தாக்கல் செய்ய இன்று மதுரவாயல் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்தார். மநீம உறுப்பினர்கள் புடை சூழ கையில் டார்ச் லைட்டுடன் வந்தார்.

‘பணத்தை மறந்துட்டு…’ வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த பத்மபிரியா!

எல்லாவற்றையும் சரியாக செய்த அவர், வேட்பு மனு தாக்கல் செய்யும் முன்பு செலுத்த வேண்டிய டெபாசிட் பணம் ரூ.10 ஆயிரத்தை மறந்து விட்டார். உடனே அங்கிருந்த உதவியாளர்கள் பணத்தை கொண்டு வந்து கொடுத்த பிறகு, அவர் மனு தாக்கல் செய்தார். ‘தமிழச்சி’ என்று சமூக வலைத்தளங்களில் அழைக்கப்படும் பத்ம பிரியாவுக்கு பெரும் ஆதரவு இருப்பதால், மதுரவாயல் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கணபதிக்கும் அதிமுக வேட்பாளர் பெஞ்சமினுக்கும் சவாலாக இருப்பார் என கூறப்படுகிறது.