மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் விவரம்!!

 

மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் விவரம்!!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை அடுத்து பல்வேறு கட்சிகள் தங்களின் அணியில் இடம்பெற கூடிய கட்சிகளுக்கான இட ஒதுக்கீடு, கூட்டணி பேச்சுவார்த்தை ஆகியவற்றை முடித்துக்கொண்டு வேட்பாளர்கள் மற்றும் தொகுதிகள் குறித்த அறிவிப்பை வெளியிட்டு வருகின்றன. அதன்படி மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் மற்றும் வேட்பாளர்களின் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் கமல்ஹாசனின் பெயர் இடம்பெறவில்லை. அடுத்தக்கட்ட வேட்பாளர் பட்டியல் அறிவிக்கும் போது அவரது பெயர் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் விவரம்!!

சினேகன் விருகம்பாக்கம் தொகுதியிலும் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமிடம் பணியாற்றிய பொன்ராஜ் அண்ணா நகர் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். பத்மபிரியா -மதுரவாயல், ரமேஷ் கொண்டலசாமி – மாதவரம், பாசில் – ஆர்.கே.நகர், பொன்னுசாமி – பெரம்பூர், சந்தோஷ்பாபு – வில்லிவாக்கம், பிரியதர்ஷினி – எழும்பூர், சிநேகா மோகன்தாஸ் – சைதாப்பேட்டை, செந்தில் ஆறுமுகம் – பல்லாவரம், சிவ இளங்கோ – தாம்பரம், லாவண்யா – திருப்போரூர், முருகானந்தம் – திருவெறும்பூர், உமா தேவி – அருப்புக்கோட்டை உள்ளிட்டோர் வேட்பாளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.