“பழனிசாமி என்ன மண் வெட்டியா முதல்வரானாரு?” – கரூரை சிதறவிட்ட செந்தில்பாலாஜி

 

“பழனிசாமி என்ன மண் வெட்டியா முதல்வரானாரு?” – கரூரை சிதறவிட்ட செந்தில்பாலாஜி

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்குக் காரணமான மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அந்த வகையில் கரூர் மாவட்ட திமுக சார்பில் மாவட்ட பொறுப்பாளர் வி. செந்தில்பாலாஜி எம்எல்ஏ தலைமையில் கரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

“பழனிசாமி என்ன மண் வெட்டியா முதல்வரானாரு?” – கரூரை சிதறவிட்ட செந்தில்பாலாஜி

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பதற்காக கரூர் பேருந்து நிலைய ரவுண்டானவிலிருந்து வட்டாட்சியர் அலுவலகம் வரை மோட்டார் சைக்கிள், 2 கேஸ் சிலிண்டர்கள் ஏற்றிய மாட்டு வண்டியை செந்தில்பாலாஜி ஓட்டி வந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

“பழனிசாமி என்ன மண் வெட்டியா முதல்வரானாரு?” – கரூரை சிதறவிட்ட செந்தில்பாலாஜி

அப்போது பேசிய அவர், “மண் வெட்டி எடுத்து பழனிசாமி முதல்வராகவில்லை. கூவத்தூரில் ஒரு சிலருக்கு கொடுக்க வேண்டியதைக் கொடுத்து தான் முதல்வரானார். அன்று நானும் அந்த பாவத்தைச் செய்துவிட்டேன். அந்த தவறுக்கு நானும் காரணமாகிவிட்டேன். அந்தப் பாவத்தை கழுவவே நல்ல இடத்தில் சேர்ந்துள்ளேன். முதல்வராக பழனிசாமியின் நாட்கள் எண்ணப்படுகின்றன. எடப்பாடி தொகுதி மட்டுமல்ல, தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும்” என்றார்.