“திருப்பதிக்கு சென்றால் உரிய மரியாதை கிடைப்பதில்லை ” : நடிகை ரோஜா கண்ணீர் மல்க புகார்!

 

“திருப்பதிக்கு சென்றால் உரிய மரியாதை  கிடைப்பதில்லை ” : நடிகை ரோஜா கண்ணீர் மல்க புகார்!

திருப்பதியில் தனக்கு உரிய மரியாதை அளிக்கப்படுவதில்லை என்று எம்எல்ஏ ரோஜா பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார்.

“திருப்பதிக்கு சென்றால் உரிய மரியாதை  கிடைப்பதில்லை ” : நடிகை ரோஜா கண்ணீர் மல்க புகார்!

தமிழ், தெலுங்கு, கன்னடம் போன்ற பல மொழி திரைப்படங்களில் நடித்தவர் நடிகை ரோஜா. இவர் திருமணத்திற்கு பிறகு நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டு அரசியலில் களமிறங்கினார். ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் நிர்வாகியாக இருந்த இவர் நகரி தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏவானார்.  தற்போது ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான அரசில்,  ரோஜாவுக்கு தொழிற்சாலைகள் உள்கட்டமைப்பு கழகத்தின் தலைவர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது.

“திருப்பதிக்கு சென்றால் உரிய மரியாதை  கிடைப்பதில்லை ” : நடிகை ரோஜா கண்ணீர் மல்க புகார்!

இந்நிலையில் நடிகையும் நகரி தொகுதி எம்எல்ஏ-வுமான நடிகை ரோஜா, தனக்கு திருப்பதி கோயிலில் உரிய மரியாதை கிடைப்பதில்லை என்று புகார் அளித்துள்ளார். திருப்பதியில் உள்ள பத்மாவதி விருந்தினர் மாளிகையில், ஆந்திர மாநில சட்டமன்ற உரிமை குழு தலைவர் கோவர்த்தன் ரெட்டி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட எம்எல்ஏ ரோஜா, திருப்பதி கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய குடும்பத்துடன் சென்றால் உரிய மரியாதை வழங்கப்படுவதில்லை என்று கண்ணீர் மல்க புகார் அளித்துள்ளார். ரோஜாவின் புகார் தொடர்பாக விசாரணை நடத்துவதாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டமன்ற உரிமை குழு தலைவர் கோவர்த்தன் ரெட்டி உறுதியளித்துள்ளார்.