“கருணாநிதியின் மரணம் குறித்து விசாரிக்கப்படும்” – அதிமுக எம்.எல்.ஏ பேட்டி!

 

“கருணாநிதியின் மரணம் குறித்து விசாரிக்கப்படும்” – அதிமுக எம்.எல்.ஏ பேட்டி!

2021ல் அதிமுக ஆட்சி அமைத்ததும் கருணாநிதியின் மரணம் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று அதிமுக எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா தெரிவித்தார்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ” அம்மா ஜெயலலிதாவின் குறித்த திமுக என்ன கூறினாலும் தைரியமாகத் தான் இருக்கிறோம். நேற்று மு.க அழகிரி ஸ்டாலின் குறித்து தெளிவாக கூறியுள்ளார். கருணாநிதியின் உடல்நிலை சரியில்லாத போதும் தேர்தலில் வெற்றி பெறலாம் என்று கூறி ஸ்டாலின் தனது சுயலாபத்திற்காக அவரை நிறுத்த வைத்திருக்கிறார். கருணாநிதியின் மரணத்திற்கு ஸ்டாலின் தான் காரணம் என்று அவரே வெளிப்படையாக கூறியிருக்கிறார்’ என்று கூறினார்.

“கருணாநிதியின் மரணம் குறித்து விசாரிக்கப்படும்” – அதிமுக எம்.எல்.ஏ பேட்டி!

தொடர்ந்து, “2021ல் அதிமுக ஆட்சி அமைத்தவுடன் கருணாநிதி மரணம் குறித்து விசாரணை நடத்தப்படும். அதற்கு காரணமாக இருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்வோம். மு.க அழகிரி சாட்சி சொல்ல வருவார். மதுரையில் திமுக கோட்டை உடைந்து விட்டது” என்று தெரிவித்தார்.

மேலும், “திமுகவின் வெற்றியை நாங்கள் மறுக்கவில்லை. இருப்பினும், திமுக வெற்றி எல்லாமே கோட்டையாக மாறாது. திமுகவில் சீட் கிடைக்கவில்லை என்றால் அங்கிருந்து எல்லாரும் அழகிரி பக்கம் வருவார்கள்” என்றும் கூறினார்.