முதல் சட்டசபையை வெற்றிகரமாக முடித்த பின் தந்தை நினைவிடத்துக்கு சென்ற ஸ்டாலின்

 

முதல் சட்டசபையை வெற்றிகரமாக முடித்த பின் தந்தை நினைவிடத்துக்கு சென்ற ஸ்டாலின்

முதலமைச்சராகப் பொறுப்பேற்று முதல் சட்டசபை வெற்றிகரமாக நடத்திய நிலையில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதி நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர் பெருமக்கள் மரியாதை செலுத்தினர்.

முதல் சட்டசபையை வெற்றிகரமாக முடித்த பின் தந்தை நினைவிடத்துக்கு சென்ற ஸ்டாலின்

16வது சட்டமன்ற கூட்டத் தொடரின் முதல் கூட்டம் கடந்த திங்கட்கிழமை ஆளுநர் உரையுடன் தொடங்கியது. தொடர்ச்சியாக நான்கு நாட்கள் நடைபெற்ற இந்தக் கூட்டம் நேற்றுடன் முடிவடைந்தது. முதல் சட்டமன்ற கூட்டம் சிறப்பாக முடிந்த காரணத்தினால் திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் மறைந்த திமுக தலைவர் கருணாநிதி நினைவிடத்தில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். அவருடன் அமைச்சர்கள் அனைவரும் கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். அதன்பிறகு கருணாநிதி நினைவிடத்திலேயே அமைச்சர்களுடன் முதலமைச்சர் சில நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்தார்
முன்னதாக அமைச்சாரவை கூட்டம் நேற்று மாலை 6மணி அளவில் துவங்கி 7 மணி வரையில் நடைபெற்றது

முதல் சட்டசபையை வெற்றிகரமாக முடித்த பின் தந்தை நினைவிடத்துக்கு சென்ற ஸ்டாலின்

விரைவில் பட்ஜெட் கூட்டத்தொடர் கூடவுள்ள நிலையில், அனைத்து அமைச்சர்களுடனும் முதலமைச்சர் துறைரீதியாக ஆலோசனை கூட்டங்களை நடத்தவுள்ளார். அனைத்து துறை அமைச்சர்களும் தங்கள் துறையில் மேற்கொள்ள வேண்டிய பணிகள், நடைபெற்று வரும் பணிகள் குறித்து தயாராக அறிவுறுத்தப்பட்டுள்ளது.