வெற்றி களிப்பில் சோர்ந்துவிடாதீர்கள்… உள்ளாட்சி தேர்தலுக்கு தயாராகுங்கள்- மு.க.ஸ்டாலின்

 

வெற்றி களிப்பில் சோர்ந்துவிடாதீர்கள்… உள்ளாட்சி தேர்தலுக்கு தயாராகுங்கள்- மு.க.ஸ்டாலின்

சட்டமன்ற தேர்தலில் உழைத்தது போலவே உள்ளாட்சி தேர்தலிலும் கவனமுடன் செயலாற்ற வேண்டும் என திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஆலோசனை வழங்கப்பட்டது.

வெற்றி களிப்பில் சோர்ந்துவிடாதீர்கள்… உள்ளாட்சி தேர்தலுக்கு தயாராகுங்கள்- மு.க.ஸ்டாலின்

சட்டமன்ற பொது தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்த பிறகு திமுகவின் முதல் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில், திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு க ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், பொதுச்செயலாளர் துரைமுருகன் பொருளாளர் டி.ஆர் பாலு, முதன்மை செயலாளர், துணை பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சியின் மூத்த நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற உழைத்த அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் இந்த கூட்டத்தில் வாழ்த்துகளும், பாராட்டும் தெரிவிக்கப்பட்டது. வருகின்ற செப்டம்பர் 15-ஆம் தேதிக்குள் நடைபெறாமல் உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தல் மற்றும் பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி ஆகியவற்றிற்கான உள்ளாட்சி தேர்தலை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விரைவில் இதற்கான தேர்தல் நடைபெற உள்ளது.எனவே மாவட்ட செயலாளர்கள் வெற்றி களிப்பில் சோர்ந்துவிடாமல் தேர்தலுக்கு தயாராக வேண்டும். உள்ளாட்சி தேர்தலிலும் கவனமுடன் செயல்பட்டு வெற்றி பெற உழைத்திட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில் அதிமுகவில் இருந்து இன்று நீக்கப்பட்ட சிந்து ரவிச்சந்திரன், காளியப்பன் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மாரியப்பன் கென்னடி, ஜெயந்தி பத்மநாபன், திமுகவில் இணைந்தனர்.