“நீட் ஒரு தேர்வே அல்ல” : மாணவி தற்கொலை குறித்து மு.க. ஸ்டாலின் ஆவேச பதிவு!

 

“நீட் ஒரு தேர்வே அல்ல” : மாணவி தற்கொலை குறித்து  மு.க. ஸ்டாலின் ஆவேச பதிவு!

நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவி தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சி அளிப்பதாக திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

“நீட் ஒரு தேர்வே அல்ல” : மாணவி தற்கொலை குறித்து  மு.க. ஸ்டாலின் ஆவேச பதிவு!

மதுரை ரிசர்வ் லைன் பகுதியைச் சேர்ந்த சார்பு ஆய்வாளர் முருகசுந்தரத்தின் மகள் ஜோதி துர்கா நீட் தேர்விற்கு தயாராகி வந்த நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கடந்த ஆண்டு நீட் தேர்வில் தோல்வியடைந்த இவர் இந்தாண்டு நீட் தேர்விற்கு தயாராகி வந்த நிலையில் நீட் தேர்வு குறித்த அச்சத்தால் தற்கொலை செய்து கொண்டது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இதுக்குறித்து முக ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், “நீட் அச்சத்தினால் மதுரை மாணவி ஜோதிஸ்ரீ துர்கா தற்கொலை செய்தது அதிர்ச்சி!நீட் மாணவர்களை நிலைகுலைய வைப்பதாக இருப்பதை, அனிதா மரணம் முதல் ஜோதிஸ்ரீ துர்காவரை உணர முடிகிறது. மீண்டும் சொல்கிறேன்;தற்கொலை என்பது தீர்வல்ல; நீட் ஒரு தேர்வே அல்ல!” என்று பதிவிட்டுள்ளார்.