அதிமுக அரசு மக்களை ஏமாற்றுகிறது : மு.க ஸ்டாலின் குற்றச்சாட்டு!

 

அதிமுக அரசு மக்களை ஏமாற்றுகிறது : மு.க ஸ்டாலின் குற்றச்சாட்டு!

கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக அரசு மக்களை ஏமாற்றிக் கொண்டிருப்பதாக திமுக தலைவர் மு.க ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் சூழலில், அதிமுக மற்றும் திமுகவுக்கு எதிரான மோதல்கள் வலுக்கிறது. முதல்வரின் ஒவ்வொரு அசைவுகளையும் மு.க ஸ்டாலின் விமர்சித்து வரும் சூழலில், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அனைத்து செய்தியாளர்கள் சந்திப்பிலும் அதிரடியாக பேசி வருகிறார் எடப்பாடி.

அதிமுக அரசு மக்களை ஏமாற்றுகிறது : மு.க ஸ்டாலின் குற்றச்சாட்டு!

நேற்று முன்தினம் சென்னை மெரினா கடற்கரையில் ஜெயலலிதா நினைவிடம் திறப்பு விழாவில் பேசிய முதல்வர் எடப்பாடி, ஜெயலலிதா நினைவிடம் திறப்பதை ஸ்டாலின் பினாமிகளை வைத்து வழக்கு போட்டு தடுக்க முயன்றதாக குற்றஞ்சாட்டினார். அதோடு, திமுக போன்ற தீய சக்திகள் தலை தூக்காத வண்ணம் திறம்பட ஆட்சி நடத்துவதாகவும் வரும் தேர்தலிலும் அதிமுகவே வெல்லும் என்றும் தெரிவித்தார்.

இந்த நிலையில் முதல்வரின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த மு.க ஸ்டாலின், பினாமிகள் மூலம் வழக்கு போட்டு ஜெயலலிதா நினைவிட திறப்பை தான் தடுப்பதாக எடப்பாடி பொய் சொல்கிறார் என்று தெரிவித்தார். அதோடு, கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக அரசு மக்களை ஏமாற்றி வருவதாகவும் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை ஆணையம் அமைத்த முதல்வர் அதை கண்டுகொள்ளவில்லை எனவும் கூறினார். மேலும், கடலூரைச் சேர்ந்த அமைச்சர் சம்பத் 1,000 பேருக்கு வேலை தரும் ஒரு ஆலையை மாவட்டத்தில் கொண்டு வந்தாரா? என்றும் கேள்வி எழுப்பினார்.