“நம் மக்களை காக்க ஒன்றிணைவோம் உடன்பிறப்புகளே” – திமுகவினருக்கு மு.க ஸ்டாலின் அறிவுறுத்தல்!

 

“நம் மக்களை காக்க ஒன்றிணைவோம் உடன்பிறப்புகளே” – திமுகவினருக்கு மு.க ஸ்டாலின் அறிவுறுத்தல்!

நிவர் இருந்து மக்களை பாதுகாக்க திமுகவினர் உதவி புரிந்திட வேண்டும் என அக்கட்சி தலைவர் மு.க ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

“நம் மக்களை காக்க ஒன்றிணைவோம் உடன்பிறப்புகளே” – திமுகவினருக்கு மு.க ஸ்டாலின் அறிவுறுத்தல்!

அந்த பதிவில், “#NivarCyclone பாதிப்புகளின் போது மக்களைப் பாதுகாப்பான இடங்களில் தங்க வைப்பதற்கும், உணவு – குடிநீர் – மருத்துவ வசதிகளைச் செய்யவும் கழகத்தினர் தயாராக இருக்க வேண்டும்! அரசு அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கிடுவோம். மக்களைக் காக்க ஒன்றிணைவோம் வாரீர்! மக்களைப் பாதுகாப்பது நமது கடமை! ” என குறிப்பிட்டுள்ளார்.

வங்கக் கடலில் உருவாகியிருக்கும் நிவர் புயல், நாளை மாமல்லபுரம் – புதுச்சேரி இடையே கரையைக் கடக்க உள்ளது. இதன் காரணமாக, கடலோர மாவட்டங்களில் அதீத கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுத்திருக்கும் வானிலை ஆய்வு மையம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தயார் நிலையில் வைத்திருக்குமாறு அறிவுறுத்தியுள்ளது. அதன் படி, புயல் பாதிப்பில் இருந்து மக்களை காக்க அரசு அனைத்து பாதுகாப்பு உபகரணங்களையும் தயார் நிலையில் வைத்திருக்கிறது. இத்தகைய சூழலில், மக்களை காக்க திமுகவினரும் களமிறங்க வேண்டும் என மு.க ஸ்டாலின் பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.